18 October 2011

தமிழ்மணத்தின் பெயரிலியே ......

                                                                                                                                                             

                                                                                                                                         
கடந்த   சில   நாட்களுக்கு  முன்   டெரர்கும்மி   தளத்தில்  சகோ  ராமசாமி  ஒரு   பயோடேட்டா  போட்டு, அதில்  நீங்கள்  போட்ட  பின்னூட்டம்  தான்  இத்தனை  பிரச்சனைக்கும்  காரணம்.


ராமசாமி  அவர்களின்  பதிவிற்கு  பின்னூட்டமிட்ட,   தமிழ்மணத்தின்  நிர்வாகியாகிய  நீங்கள், ராமசாமி  பதிவுக்கு  பதில்  சொல்வதை  விட்டுவிட்டு   "சாந்தியும்  அவ  அக்காவும்  சமாதானியும்  உங்களுடன்  கூடிய..சே!  பதிவு  தோஷம் "   என்ற  வார்த்தையை  பயன் படுத்தி  இருக்கிறீர்கள்.   
             
               
இஸ்லாமியர்கள்  ஒருவரை  ஒருவர்  சந்தித்து  கொள்ளும்  போது  அஸ்ஸலாமு  அலைக்கும்    என்று  சலாம்  சொல்லி கொள்வோம். அதை  நீங்களும்   அறிந்ததே!      

அதன்  பொருள்  "உங்கள்  மீது  சாந்தியும், சமாதானமும்  உண்டாகட்டும்"         
என்பதாகும். அந்த  வார்த்தையை  அவமதிக்கும்  விதமாக  "சாந்தியும்  அவ  அக்காவும்  சமாதானியும்  உங்களுடன்  கூடிய..சே!  பதிவு  தோஷம் "  என்று  அருவெறுக்க  தக்க  வார்த்தையை  பயன்படுத்தி  இருக்கிறீர்கள்.        


பெண்களை    கேலி  செய்யும்  விதமாகவும்   அமைத்துள்ளன. தாங்கள்  எழுதியதை  வைத்து   பார்க்கும்  போது  தமிழ்மணத்தை  நிர்வகிக்கும்  ஆணாதிக்கவாதி  என்ற  -------  எழுதியுள்ளீர்கள்.    


இஸ்லாமியர்களைகளையும்,  இஸ்லாத்தையும்   கொச்சைபடுத்த  தான்   அந்த வார்த்தையை   பயன் படுத்தி  இருக்கீறீர்கள் .  இப்படி  ஒரு  வார்த்தையை  பயன்படுத்தியது    எந்த வகையிலும்  எங்களால்  ஏற்று கொள்ள முடியாது.  


ஒரு  நாலாந்தர   மனிதனை  போல  நாகரீகம்  இல்லாமல்  எழுதிய   அந்த  பின்னூட்டம்  எத்தனை  பேர்  உள்ளங்களை  வேதனை  படுத்தி  இருக்கும்  என்பதை   என் சகோதர  சகோதரிகள்  எழுதிய  பதிவுகளிருந்து  நீங்கள்  அறிந்திருப்பீர்கள்.


கட்டணசேவை  என்று  என்று  நீங்கள்  அடிக்கும்  கொள்ளையை  தான்  ராமசாமி  அவர்கள்  பதிவில்  வெளியிட்டு  இருந்தார். அவருக்கு  பதில்  சொல்வதை   விட்டுவிட்டு   இஸ்லாமியர்கள்  மீதும்,இஸ்லாத்தின்  மீதும்
பாய்வதன்  நோக்கம்  என்ன ?    


நீங்கள்  பயன்படுத்தி  இருக்கும்  இந்த  வார்த்தைகளிருந்து  நீங்கள் "ஒரு  தரம்  தாழ்ந்த  மனிதர்"  என்பதை  அழகாக  சொல்லி  இருக்கிறீர்கள். உங்களை  நீங்களே  அசிங்கப்  படுத்தி  கொண்டு  விட்டீர்கள். மல்லாக்க  படுத்து  கொண்டு   எச்சில்  துப்பினால்   அது நம்  மீது  படும்  என்று  தெரிந்தே  செய்ததன்  விளைவு  தான்  இது.


பதிவர்களை  வைத்துதான்  திரட்டிகள்  பயன் அடைகின்றது . திரட்டிகளை  வைத்து  பதிவர்களுக்கு  எந்த பயனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் 
நீங்கள்  பணம்   பார்ப்தற்கு எங்களை  போன்ற  பதிவர்களை  பயன்படுத்தி  கொள்கிறீர்கள். அது  தானே  உண்மை 


காலங்களில்   பதிவுகள்  எப்படி  இருந்தாலும்  சேர்த்துப்போம்  என்று  கூறி பதிவர்களை  இழுப்பது.  பின்னர்  ஒரு அளவுக்கு  முன்னேறிய  பிறகு  ஏறிவந்த ஏணியை  எட்டி  உதைப்பது.  கேடு  கெட்ட  இந்த  செயலை  தான்  இப்போது செய்து  இருக்கிறீர்கள்.


பொறுப்பான   இடத்தில்  இருக்கும்  நீங்கள்  ஒரு ............போல   எங்களை  கேலி செய்ததை    எவராலும்  ஏற்றுக் கொள்ளமுடியாத  ஒன்று.  சில  மாற்றுமத  சகோதரர்  பதிவிலும்  நீங்கள்  அறிவீர்கள்.


நடந்த   சம்பவங்களுக்கு   மனம்  வருந்தி  மன்னிப்பு  கேட்டு  இந்த  பிரச்னைக்கு   ஒரு  முற்று புள்ளி  வையுங்கள். ஏனென்றால்  இதை  ஆரம்பித்து   வைத்தது  நீங்கள்  தானே. நீங்கள்  தான்  முடித்தும்  வைக்க  வேண்டும். அதுதான்  தமிழ்மணத்திற்கும், உங்களுக்கும்  நல்லது.


நம்பிக்கையுடன்  காத்திருக்கிறோம் .காலம்  தாழ்த்தாமல்  முடிவெடுங்கள்.










==========================================================================

 
///"சாந்தி, சமாதானி" என்பவர்கள் பெண்கள் என்பதாக நான் பதிந்ததால் ("சாந்தி அவ அக்கா சமாதானி") பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கமென்ற கருத்தினை கருதப்படலாம் என்று சுட்டிக்காட்டிய பெண்பதிவர்கள் இருவரிடமும் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///


என்று  மேற்கண்ட  அவருடைய    தளத்தில்  எழுதி   உள்ளார்கள்  


மிக்க  நன்றி   பெயரிலி  என்ற   சகோ  இரமணிதரன்  அவர்கள்   

19 comments:

  1. சரியான சாட்டையடி

    ReplyDelete
  2. Neengal Ipathivil Kooruvathu Sarithan Ayesha.Vazhthukal.

    ReplyDelete
  3. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

    1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

    வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

    SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

    2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

    ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

    ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

    Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

    3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
    மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

    உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

    இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

    SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

    ReplyDelete
  4. ஸலாம் சகோ..
    தெளிவாக உங்களது என்னத்தை வெளிப்படித்தி இருக்கிறீர்கள்..
    ஆனால் அவர் மன்னிப்பு கேட்க நாம் யாரும் காத்திருக்க வில்லை சகோ..கேகாவிடால் தூக்கி எரிந்து விட்டு நடையை கட்டவேண்டியதுதான்..இன்னும் சகோதரர்கள் சொன்னது போல அரபு நாடுகளில் தமிழ்மணம் தடை செய்யப்படுவதை அவர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  5. மேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

    தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
    http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்

    //நடந்த சம்பவங்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இந்த பிரச்னைக்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள். //

    ரிப்பீட்டு

    அபு நிஹான்

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    சகோஸ்...திருடனுக்கு தேள் கொட்டிய நிலை இப்போது அவருக்கு .!!! :-)

    ReplyDelete
  9. நானும் வந்துவிட்டேன்

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்
    //நீங்கள் பயன்படுத்தி இருக்கும் இந்த வார்த்தைகளிருந்து நீங்கள் "ஒரு தரம் தாழ்ந்த மனிதர்" என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.//

    தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ஆயிஷா அபுல்,

    அல்ஹம்துலில்லாஹ்...

    உங்கள் பதிவுக்கு அல்லாஹ் வெற்றியை அளித்துள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    உங்களின் இந்த பதிவு... -/பெயரிலி எனும் சகோ.இரமணிதரனிடம் சமீப காலத்தில் தூங்கிக்கிடந்த நல்லுள்ளத்தை தட்டி எழுப்பியுள்ளது. அவரை அமைதியாக சிந்திக்க வைத்துள்ளது. அவரின் கல்மனத்தையும் கரைத்துள்ளது. ஆணவம், அதிராகத்திமிர், 'தான்மட்டுமே உயர்ந்தோன்' என்ற அகங்காரம் போன்ற அனைத்து கெட்ட எண்ணங்களையும் அடித்து நொறுக்கி உடைத்துள்ளது.

    http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html

    இது அவரின் சொந்த தளம். நான்கு நாட்களுக்கு முன் இங்கே காட்டமாக பதிவு எழுதியவர் அதன்... கீழே... வெகு கீழே... நேற்று அமைதியாக, அடக்கமாக, அன்பாக, உள்ளம் உருகி, அழகிய வார்த்தைகள் கொண்டு யாரும் சடுதியில் விளங்கிக்கொள்ளும் எளிய தமிழில் அற்புதமாக தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். நிறைய எழுதியுள்ளார். எனினும்...

    அதில் சில முக்கிய வரிகள் மட்டும்...

    ///"சாந்தி, சமாதானி" என்பவர்கள் பெண்கள் என்பதாக நான் பதிந்ததால் ("சாந்தி அவ அக்கா சமாதானி") பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கமென்ற கருத்தினை கருதப்படலாம் என்று சுட்டிக்காட்டிய பெண்பதிவர்கள் இருவரிடமும் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///

    ///பெண்களின் பார்வை அப்படியாக இருப்பின், ஏற்றுக்கொண்டு அதற்காகமட்டும் அவர்களிடம் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///

    அவர் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், சகோ.ஆயிஷா அபுல்.

    அந்த இருவரில் மற்றொருவர் அனேகமாக, பதிவு போடாவிட்டாலும் சகோ.ஹைதர் அலியின்
    "தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா" பின்னூட்டத்தில் இக்கருத்தை தெரிவித்த சகோ.ஹுசைனம்மாவாக இருக்கலாம்.

    அவர் சொன்ன கருத்து:

    ஹுஸைனம்மா சொன்னது… 9

    //சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்//

    அது பதிவுத் தோஷம் அல்ல, பழக்க தோஷம்!! ‘அமைதி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் ‘சாந்தி’ என்ற வார்த்தையைக்கூட பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பது, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் அவரது வக்கிரமான ஆழ்மனசு வெளிப்பட்டிருக்கிறது!! :-((

    தமிழ்மணத்தின் பாராமுகத்துக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.
    16 அக்டோபர், 2011 11:10 pm

    ReplyDelete
  12. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ஆயிஷா அபுல்,

    வ அலைக்கும் சலாம் வரமத்துல்லாஹி வபரகாத்துஹு


    //அல்ஹம்துலில்லாஹ்...

    உங்கள் பதிவுக்கு அல்லாஹ் வெற்றியை அளித்துள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சி.//


    அல்ஹம்துலில்லாஹ்...

    எல்லாபுகழும் நம்மைபடைத்த இறைவனுக்கே.
    எல்லாம் அவனுடைய செயல்



    //உங்களின் இந்த பதிவு... -/பெயரிலி எனும் சகோ.இரமணிதரனிடம் சமீப காலத்தில் தூங்கிக்கிடந்த நல்லுள்ளத்தை தட்டி எழுப்பியுள்ளது. அவரை அமைதியாக சிந்திக்க வைத்துள்ளது. அவரின் கல்மனத்தையும் கரைத்துள்ளது. ஆணவம், அதிராகத்திமிர், 'தான்மட்டுமே உயர்ந்தோன்' என்ற அகங்காரம் போன்ற அனைத்து கெட்ட எண்ணங்களையும் அடித்து நொறுக்கி உடைத்துள்ளது.//


    எப்படியே அவர்கள் தவறை உணர்த்து விட்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...


    ///பெண்களின் பார்வை அப்படியாக இருப்பின், ஏற்றுக்கொண்டு அதற்காகமட்டும் அவர்களிடம் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன்.///

    //அவர் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், சகோ.ஆயிஷா அபுல்.//


    நம்மை படைத்த இறைவனே நம் பாவங்களை மன்னிக்கும் போது நாமும் அவர்களை மன்னித்து விட்டு, ஒன்று பட்டு செயல் படுவோம்.

    இனி இது போல் எந்த தவறு நடக்காமல் இறைவன் காப்பாத்துவானாக ஆமீன்
    துஆ செய்வோம்.

    சகோ ரமணிதரன் பதிலை கவனத்தில் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  13. மேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.

    ReplyDelete
  14. சலாம் சொன்ன அனைவருக்கும்

    வ அலைக்கும் சலாம் வரஹுமத்துல்லாஹி வபரகாத்துஹு

    அனைவருடைய வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. சரியாக சொல்லி உள்ளீர்கள். என்னதான் உணர்ச்சி வசப்பட்டாலும், பொது இடத்தில் நாகரீகமாக பேசத்தெரியாதவர்கள் படித்திருந்தாலும், முட்டாள்களே...

    ReplyDelete