26 September 2011

சிரியுங்கள... சிரியுங்கள... சிரியுங்கள...


                                 
                                                  
பயணி  -1 :     என்ன   சார்   திடீர்னு   ரயிலு   நின்னுடுச்சு           

பயணி  -2 :     டிராக்கில் மரம் விழுந்து கிடக்கு.

பயணி  -1 :    எனக்கு அப்பவே தெரியும். மரங்கள்லாம் பின்னாடி
ஓடும்போது  தடுமாறி    கீழே   விழும்னு நினைச்சேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர்     :   பேஷண்ட்டோட நெஞ்சுல பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டாரு டாக்டர்!
 
மற்றொருவர்:   "மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்ன்னு சொன்னாங்க. அதுக்காக இப்பிடியா?'          

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வந்தவர்:     எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க? 


 ஆசிரியர்:    வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அவர் :      நேத்து    உங்க   காருக்கு   எப்படி   Accident   ஆச்சு..?


இவர் :      அதோ,  அங்கே   ஒரு   மரம்  தெரியுதா..?


அவர் :      தெரியுது...


இவர் :      அது நேத்து எனக்கு தெரியலை..!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
தோழி : 1:   உன்னைப் பார்த்ததும் உன் புருசன் பேய் அறைந்தவர்
                      மாதிரி ஏன் திருதிரு வென முழிக்கிறார்   ஏண்டி


தோழி :2 :     ஓ   அதுவா   நான்   மேக்கப்பை   கலைத்தது   தான்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அம்மா...      இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு
                       ஒழுங்காக இருக்காங்களோஅவங்களுக்கு
                       நானொரு பரிசு தரப்போறேன்





பிள்ளைகள்....   போம்மாஇந்த விளையாட்டுக்கு நாங்கள்
                               வரவில்லை எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறார்



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


டா‌க்ட‌ர் :  உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி       சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.


நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?.




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


டீச்சர்         :    உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?


மாணவன்:    96 பேர்...


டீச்சர்:            என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?


மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ...


டீச்சர்:         ?????


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


(டிவி ஷோ ரூம் ஒன்றில்)


விற்பனையாளர்  : இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி

வாங்குபவர்   :          நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.


பொண்டாட்டி:   என்னங்க, இந்த நேரத்துல...

புருஷன்          :   ஒரு அதிசயம் நடந்துருச்சிடி.. 

பொண்டாட்டி:   என்ன  அதிசயம்?


புருஷன்   :   ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே    லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா? 


பொண்டாட்டி : அறிவுகெட்ட  முண்டம்   தூக்க  கலக்கத்துல  பாத்ரூம்ன்னு  நினைச்சி  பிரிட்ஜ  திறந்து  ஒண்ணுக்கு  இருந்துட்டு  கதை  சொல்றியா, மூடிகிட்டு படு..


புருஷன் :  !!!!!!!?????????????? 





  உங்கள்  சகோதரி







                                                                                         

                                                   

22 September 2011

மணி மொழிகள் ....


                                                                                                                         
 
நம்  அனைவர்   மீதும்  ஏக  இறைவனின்  சாந்தியும்  சமாதானமும்  நிலவட்டுமாக... ஆமீன்...!
                                                                  

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
 
3. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
 
4. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

5. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

6. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

7. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

8. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

9. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

10. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

11. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

12. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

13. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

14. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

15. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

16. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

17. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

18. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

19. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

20. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

21. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

22. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

23. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

24. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

25. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

26. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

27. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

28. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!


29.சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

  உங்கள்  சகோதரி
                                                                                                                          

15 September 2011

ஸ்வீட்டோடு வருகிறேன்.....

அனைவரும் நலமா? நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  நிலவட்டுமாக...ஆமீன்...!



உங்களை  எல்லாம்  நீண்ட  நாட்களுக்கு  பின்  சந்திப்பதால், ஸ்வீட்டோடு   வந்திருக்கிறேன். பேரு வட்லப்பம். டேஸ்ட் சூப்பரோ சூப்பர்.ஹெல்தியான புட். செய்து   பார்த்துட்டு   எப்படின்னு   சொல்லுங்கோ


                                                                              
                                                                  ட்லப்பம்

தேவையான  பொருட்கள் 


தேங்காய் பெரியது--1
முட்டை ---------------10
சர்க்கரை -------------- 1/2 கி
பாதாம் பருப்பு ---------25 கிராம்
முந்திரி         -----------50கிராம்
திராட்சை    -----------25கிராம்
ஏலக்காய்-------------10கிராம்
பொரி கடலை-------10கிராம்{ஒடச்ச கடலை}


செய்முறை 

முதலில்   தேங்காயை   உடைத்து,  நறுக்கி  மிக்சியில்   போட்டு   அரைத்து  கெட்டியாக  பால்  எடுத்து  கொள்ளவும். {பாலின்  அளவு  முக்கால் லிட்டர்  கெட்டியாக}தண்ணீர்   கூடிவிட்டால் சொதப்பி விடும் .கவனம்.


அதில்  சர்க்கரையை  போட்டு  நன்றாக  கரைத்து  வடிகட்டி வைக்கவும்.


முட்டையை   உடைத்து   மிக்சி  ஜாரில்  ஊற்றி  மிக்சியை  இடது  பக்கம்  சுற்றி, முட்டை  கலவையை     தேங்காய்   பாலில்   ஊற்றவும்.


{பாதம்  பருப்பை  ஊற  வைத்து  மேல்  தோல்  நீக்கி  கொள்ளவும்.}


பாதம் 25கிராம் ,   முந்திரி 25கிராம்,  ஒடச்சகடலை 10கிராம்
ஏலக்காய்  10கிராம்   அனைத்தையும்   மிக்சியில்  நன்றாக  பவுடர்  பண்ணி,
முட்டைபால்  கலவையில்  ஊற்றி  கட்டி  விழாமல்  கலக்கவும்.


இந்த   கலவையை  குக்கருக்குள்   வைக்குமாறு   ஒரு   பாத்திரத்தில்
வைத்து ,  குக்கர்   அடியில்   கொஞ்சம்   தண்ணி   வைத்து . இந்த  பாத்திரத்தை
உள்ளே   வைத்து   வேகவைக்கவும்.  இரண்டு   விசில்   வந்தவுடன்  திறந்து {கொஞ்சம் கொல கொல என்று இருக்கும்  போது} முந்திரி  25கிராம், திராச்சை  25கிராம்   எடுத்து   அதில்  தூவி, திரும்ப   மூடி வேக   வைக்கவும். 6,7   விசில்  வந்தவுடன்  ஆப பண்ணிவிட்டு ,ஏர்  போனவுடன் திறக்கவும்.அல்லது  நைட்  செய்து விட்டு  காலையில் எடுக்கவும்.


சூப்பெரான... சுவையான ... வட்லப்பம்  ரெடி ......

தாராளமாக  10பேர் சாப்பிடலாம். 

உங்கள்  தேவைக்கு  ஏற்ப  அளவை  கூட்டி கொள்ளவும்.

எங்களுடைய  பெருநாளைக்கு {பண்டிகை} கண்டிப்பாக  செய்வோம்.

இதை  யாருலாம்  செய்து  இருக்கீங்க ? சாப்பிட்டு  இருக்கீங்க ?


குறிப்பு :   தேங்காயில்  மேல் இருக்கும்  கருப்பு  தோடை  நீக்கி  விட்டு  பால் எடுத்தால்  வட்லப்பம்  வெள்ளையாக  இருக்கும்.அப்படியே  பால்  எடுத்தால்
கொஞ்சம்  கலர்  கருப்பாகி  விடும். எப்படி  வேண்டுமானாலும்  செய்யலாம். பாதம்  பருப்பு  சேர்ப்பது  உங்கள் விருப்பத்தை  பொறுத்து.